தமிழக செய்திகள்

கரபுரநாதர் கோவிலில் பாலாலயம் நிகழ்ச்சி

உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பாலாலயம் நிகழ்ச்சி இன்று நடக்கிறது.

கொண்டலாம்பட்டி:-

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உத்தமசோழபுரத்தில் பெரிய நாயகி சமேத கரபுரநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது திருப்பணி தொடங்கும் விழாவாக பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று காலை 9 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர் காலை 11 மணிக்கு பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.

இதைத்தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடக்கிறது. பின்னர் காலை 5 மணிக்கு மேல் 5.45 மணிக்குள் பாலாலயம் நிகழ்ச்சி நடக்கிறது. இதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் முகூர்த்தக்கால் நடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை