அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நல்லநாயகபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நல்லநாயகபுரம் குழுமூர் சாலையில் உள்ள வேலாணி குளத்தின் கரையில் சக்தி அழைத்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். பின்னர் மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.