தமிழக செய்திகள்

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பெட்டி இன்று சென்னை வருகை...!

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பெட்டி இன்று சென்னை வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 18-ந்தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க. வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். இதையடுத்து இருவரும் மாநிலம்தோறும் சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகளை தமிழக சட்டப்பேரவை செயலகம் முழு வீச்சில் செய்து வருகிறது.

இந்த நிலையில், ஜூலை 18-ல் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டி இன்று மாலை சென்னை கொண்டுவரப்படுகிறது. டெல்லி இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்படும் வாக்குப்பெட்டிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு