தமிழக செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை: மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

காரைக்கால்,

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். காரைக்கால் அரசு மருத்துவமனையில் வயிற்றுப்போக்கு காரணமாக சிகிச்சைப் பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.

மேலும் ஆன்லைன் விளையாட்டு மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் இதுகுறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா