தமிழக செய்திகள்

தடை செய்யப்பட்டபுகையிலை பொருட்கள் பறிமுதல்

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

கடத்தூர்,

கோபி அருகே உள்ள சவுண்டப்பூர் பகுதியில் கோபி போலீசார் ரோந்து சென்று வந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது அந்த கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டனர். உடனே கடையில் இருந்தவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 'அவர் அதே பகுதியை சேர்ந்த தங்கவேல் (வயது 50) என்பதும், அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதும்,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தங்கவேலை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 10 பாக்கெட் புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை