அறந்தாங்கியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆவணத்தான்கோட்டையில் சாலையின் இருபுறமும் ஏராளமான ஆலமரங்கள் உள்ளன. இதில் ஒரு ஆலமரத்தில் இருந்து தேன்றிய விழுதுகள் மூலம் சாலையின் மறுபுறம் மற்றொரு ஆலமரம் வளர்ந்து சாலையின் நடுவே நுழைவுவாயில் (ஆர்ச்) போல் உள்ளது. இதனை அந்த வழியாக கடந்து செல்பவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு செல்கின்றனர். அந்த ஆலமர நுழைவு வாயிலை படத்தில் காணலாம்.ஆலமர நுழைவுவாயில்