தமிழக செய்திகள்

சோழிங்கநல்லூரில் மின்சார மோட்டார் சைக்கிளின் பேட்டரி வெடித்து வீட்டில் தீ விபத்து

சோழிங்கநல்லூரில் மின்சார மோட்டார் சைக்கிளின் பேட்டரி வெடித்து வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 33). சமையல் வேலை செய்து வருகிறார். இவர், மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவர், தனது மின்சாரமோட்டார் சைக்கிளின் பேட்டரியை வீட்டில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்கி கொண்டு இருந்தார். திடீரென நள்ளிரவில் பேட்டரி வெடித்து சிதறி வீடு தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதுகுறித்து தகவலறிந்து வந்த செம்மஞ்சேரி போலீசார் மற்றும் துரைப்பாக்கம் தீயணைப்பு துறையினர் வீடு முழுவதும் பரவிய தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சேதமடைந்தது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...