தமிழக செய்திகள்

பீடித்தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

பாவூர்சத்திரம் அருகே பீடித்தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே முத்துமாலைபுரத்தில் தனியார் பீடி கடை உள்ளது. இங்கு அய்யனூர், திருமலாபுரம், சிவநாடனூர், ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 400-க்கும் மேற்பட்ட பெண்கள் பீடி சுற்றி வருகின்றனர். இவர்களுக்கு தரமற்ற பீடி இலை தூள்கள் கொடுத்து, போனஸ் மற்றும் விடுமுறை, உயர்த்தப்பட்ட சம்பளம் ஆகியவற்றை முறையாக கொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

இதனை கண்டித்து சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று சில்லரைபுரவு கிராம ஊராட்சி தலைவர் குமார் தலைமையில் கடையை முற்றுகையிட்டனர். இதனை அறிந்த நிர்வாகத்தினர் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு சில நாட்களில் சம்பளம் மற்றும் போனஸ் கொடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்