தமிழக செய்திகள்

பறவைகள் கணக்கெடுக்கும் பணி

கொடைக்கானல் வனப்பகுதியில், பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

தினத்தந்தி

தமிழகத்தில் உள்ள வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. அதன்படி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர், இயற்கை மற்றும் பறவைகள் ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் என சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்ட வன அதிகாரி திலீப், உதவி வன பாதுகாவலர் சக்திவேல் ஆகியோர் மேற்பார்வையில் 3 குழுக்களாக பிரிந்து கொடைக்கானல் பாம்பேசோலை, வட்டக்கானல் சோலை, பெருமாள்மலை, அடுக்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் கணக்கெடுத்து வருகின்றனர்.

நேற்று தொடங்கிய இந்த பறவைகள் கணக்கெடுப்பில் ஒயிட் செக்டு பாபட், பிளாக் அண்ட் ஆரஞ்சு பிளை கேட்ச்சஸ், இந்தியன் பிளாக் பேர்ட், பிலே லாபின் ட்ரஸ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 2-வது நாளாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இதுகுறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு, நாளை (திங்கட்கிழமை) அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்