தமிழக செய்திகள்

'பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தானே அறநிலையத்துறையை அகற்ற முடியும்' - கனிமொழி எம்.பி. விமர்சனம்

பா.ஜ.க. ஆட்சிக்கு வரப்போவதில்லை என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

தூத்துக்குடி,

திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறை இருக்காது என்று தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் கோவில்களுக்கு வெளியே இடம்பெற்றுள்ள கடவுள் மறுப்பு பதாகைகள் அகற்றப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் அண்ணாமலையின் பேச்சு குறித்து தூத்துக்குடியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், "பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தானே அறநிலையத்துறையை அகற்ற முடியும். அவர்கள் ஆட்சிக்கு வரப்போவதில்லை. எனவே அதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை" என்று தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து