கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

பா.ஜனதா மாவட்ட நிர்வாகிகள் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம்

பா.ஜனதா மயிலாடுதுறை மாவட்ட தலைவர் கே.அகோரம் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

சென்னை,

மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27-வது தலைமை மடாதிபதியாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் இருந்து வருகிறார்கள். இவர் தொடர்பாக, ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக மிரட்டல் விடுத்த வழக்கில், பா.ஜனதா மயிலாடுதுறை மாவட்ட தலைவர் கே.அகோரம் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் பொறுப்பில் இருந்து அகோரத்தை விடுவித்து, தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், திருவாரூர் மாவட்ட பா.ஜனதா விவசாய அணியின் முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்த மதுசூதனன் என்பவரை, திருவாரூர் மாவட்ட பா.ஜனதா தலைவர் பாஸ்கர், பொதுச் செயலாளர் செந்திலரசன் ஆகியோர் கடந்த மாதம் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் அவர்கள் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட பா.ஜனதா தலைவர் பாஸ்கர், பொதுச் செயலாளர் செந்திலசரன் ஆகியோரை கட்சி பொறுப்பில் இருந்து விடுவித்து மாநில தலைவர் அண்ணாமலை ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து