தமிழக செய்திகள்

பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை -தி.மு.க. வலியுறுத்தல்

நபிகள் பெருமான் குறித்து அவதூறு கருத்து: பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை தி.மு.க. வலியுறுத்தல்.

தினத்தந்தி

சென்னை,

தி.மு.க. சிறுபான்மையினர் நலவுரிமை பிரிவு செயலாளர் த.மஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நபிகள் பெருமான் குறித்து அவதூறு கருத்தை தெரிவித்த பா.ஜ.க.வின் செய்தித்தொடர்பாளர்கள் 2 பேரும் கைது செய்யப்படவேண்டும். பொறுப்பற்ற வகையில் செய்யப்படும் இதுபோன்ற வெறுப்பு விமர்சனங்கள் சமூகத்தில் அமைதியை மட்டுமல்ல, எதிர்காலத்துக்கே கேடு விளைவிப்பவை. அவர்கள் 2 பேர் மீதும் கட்சி ரீதியான நடவடிக்கை மட்டும் எடுத்து பா.ஜ.க. தன்னை காப்பாற்றிக்கொள்ள முயலக்கூடாது. சட்டரீதியான நடவடிக்கை அவசியம் என்பதை தி.மு.க. சிறுபான்மையினர் நலவுரிமைப் பிரிவு வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்