தமிழக செய்திகள்

பாஜகவினர் புதிய கொடிக்கம்பம் அமைக்க அனுமதி மறுப்பு..!

அனுமதியின்றி கொடிக்கம்பம் வைத்தால் மாநகராட்சி அதிகாரிகள் உதவியோடு அவை அகற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நவம்பர் 1ம் தேதி(இன்று) முதல் நாள்தோறும் 100 கொடிக்கம்பங்கள் 100 நாட்களுக்கு நடப்படும் என பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாஜகவினர் புதிய கொடிக்கம்பம் அமைக்க சென்னை போலீசார் அனுமதி அளிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

புதிய கொடிக்கம்பம் வைப்பது தொடர்பாக மாநகராட்சியிடம் அனுமதி பெற்ற கடிதம் அளிக்கப்படவில்லை எனக்கூறி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். மேலும், புதிய கொடிக்கம்பம் வைக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அனுமதியின்றி கொடிக்கம்பம் வைத்தால் மாநகராட்சி அதிகாரிகள் உதவியோடு அவை அகற்றப்படும் எனவும் போலீசார் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்