தமிழக செய்திகள்

“மருந்தகங்களில் ரத்த பரிசோதனை...கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருந்தகங்களில் ரத்த பரிசோதனை செய்வது தொடர்பாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை அண்ணா நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் லேப் டெக்னீஷியன்கள் நடத்தும் தரக்கட்டுப்பாட்டு நிர்ணயம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், லேப் டெக்னீஷியன்கள் அளித்துள்ள 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் சில மருந்தகங்களில் ரத்த பரிசோதனை செய்வது தொடர்பாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்