தமிழக செய்திகள்

ரத்ததான முகாம்

ரத்ததான முகாம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அரசு சமுதாய மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன் தலைமையில், அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முத்துக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் செல்வகாந்தி, வேல்முருகன், விக்ரமன், பாலாஜி, முகேஷ் மற்றும் செவிலியர்கள், ரத்த பரிசோதகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 22 பேர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ ரத்த வங்கி குழுவினர் கலந்து கொண்டு தானம் செய்த ரத்தங்களை சேகரித்து எடுத்துச் சென்றனர்.

SCROLL FOR NEXT