கடலூர்,
கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் குழந்தைகளுக்கு அதி வேகமாக காய்ச்சல் பரவி வருகிறது. இதன் காரணமாக கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சல் பாதித்த குழந்தைகளின் கூட்டம் அலைமேதுகிறது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்து மருத்துவரை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இதே போல் சிகிச்சைக்காக மக்கள் அதிக அளவில் வருகின்றனர்.
கிராமப்புறங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி, காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர் நகர மக்கள் கேரிக்கை விடுத்துள்ளனர்.