தமிழக செய்திகள்

நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கிய 5-வது நபரின் உடல் மீட்பு

பாறைகளுக்கு இடையே சிக்கியிருந்த 5-வது நபரின் உடலை பேரிடர் மீட்பு பணியினர் மீட்டுள்ளனர்.

தினத்தந்தி

நெல்லை,

திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த 14 ஆம் தேதி நள்ளிரவு நடந்த விபத்தில், அங்கு பணியில் இருந்த 6 தொழிலாளர்கள் பாறை இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டனர். இதில் முதல் நாளன்று 3 பேர் மீட்கபட்ட நிலையில், அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

தொடர்ந்து மறுநாள், 4-வது நபரும் மீட்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் 5-வது நபரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு நீண்ட நேரமாக அவரது உடலை மீட்பதற்கான பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில் இன்று மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பாறைகளுக்கு இடையே சிக்கியிருந்த 5-வது நபரின் உடலை சுமார் 30 மணி நேரத்திற்கு பிறகு பேரிடர் மீட்பு படையினர் மீட்டுள்ளனர். இதையடுத்து 6-வது நபரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு