தமிழக செய்திகள்

சென்னை மாங்காடு அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

மோப்பநாய் உதவியுடன் பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை, மாங்காடு அருகே கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி அலுவலக இ-மெயிலுக்கு பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் வந்தது. இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர், உடனடியாக ஆவடி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து பள்ளிக்கு விரைந்து வந்த வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் பள்ளியில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மோப்பநாய் உதவியுடன் பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி