தமிழக செய்திகள்

சென்னை ரெயில் நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... போலீசார் வலைவீச்சு

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாட்டு மையத்தை, காலை 7.15 மணிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர், காலை 8 மணிக்கு சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் எனக்கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.

உடனடியாக சென்ட்ரல் ரெயில் நிலையம் சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து வியாசர்பாடியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட மணிகண்டன் என்ற இளைஞர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. மேலும் இதற்கு முன்பும் அவர் இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்த நிலையில், மணிகண்டனை தேடி போலீசார் விரைந்தனர்.

விரைவில் மணிகண்டன் கைது செய்யப்படலாம் என கூறப்படும் நிலையில், மனநலம் பாதித்த நபர் என்பதால் அவரது பெற்றோரிடம் போலீசார் எச்சரிக்கை மட்டும் விடுக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து