தமிழக செய்திகள்

ஆறு மாதத்திற்குள் பத்திரப்பதிவு நடைமுறைகள் எளிமை ஆக்கப்படும் -அமைச்சர் மூர்த்தி

2016 முதல் 2021 வரை பத்திரப்பதிவு துறையில் வெளிப்படையாகவே முறைகேடு நடந்துள்ளன என பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கூறினார்.

தினத்தந்தி

மதுரை

மதுரையில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியில் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ளன. முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

2016 முதல் 2021 வரை பத்திரப்பதிவு துறையில் வெளிப்படையாகவே முறைகேடு நடந்துள்ளன. பத்திரப்பதிவு துறையில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரிக்க உயர்நிலைக் குழு அமைக்கப்படும். வரும் ஆறு மாதத்திற்குள் பத்திரப்பதிவு நடைமுறைகள் எளிமை ஆக்கப்படும் என்று கூறினார்.

மேலும், பத்திரப்பதிவில் முறைகேடாக பதிவு நடந்தால் சார்பதிவாளர் உள்ளிட்டோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க மசோதா கொண்டுவரப்படும். முறைகேட்டில் தொடர்புடைய பிற துறையை சேர்ந்தவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஅவர் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து