தமிழக செய்திகள்

கார் மீது லாரி மோதி சிறுவன் பலி

கார் மீது லாரி மோதி சிறுவன் பலியானான்.

தினத்தந்தி

தொண்டி, 

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே உள்ள பெருங்குளம் கிராமத்தை சேர்ந்த கவுரிசங்கர்(வயது 43). இவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வருகிறார். அடுத்த வாரம் தனது கிராமத்தில் மகன்களுக்கு காதணி விழா ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக சென்னையில் இருந்து தனது ஊருக்கு காரில் வந்து கொண்டிருந்தார். திருவாடானை அருகேயுள்ள பாரூர் கிராமத்தின் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி காரில் நேருக்கு நேர் மோதியது.

இதில் காரில் இருந்த கவரிசங்கரின் மனைவி காளீஸ்வரி(37), மகன் ராஜ் தீபன் (12), இளைய மகன் கிரன்தீப் (5), உறவினர் மகன் கதிர் (18) ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிறுவன் கிரண் தீப் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். இந்த விபத்து குறித்து திருவாடானை போலீசார் தஞ்சை மாவட்டம் கண்ணந்தக்கோட்டை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு