தமிழக செய்திகள்

இரணியல் அருகே ரெயில் மோதி கொத்தனார் சாவு

இரணியல் அருகே ரெயில் மோதி கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

நாகர்கோவில்:

இரணியலுக்கும், ஆளூருக்கும் இடையே உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக நாகர்காவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்தவர் வேர்கிளம்பி மங்காட்டை சேர்ந்த ராஜீவ் (வயது 54) என்பது தெரியவந்தது. கேரளாவில் கொத்தனார் வேலை பார்த்து வந்த அவா தற்போது ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு கேரளாவுக்கு வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் ராஜீவ் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். ஆனால் ராஜீவ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி பலியானாரா? என்று தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு