தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடிய அண்ணன்- தம்பி கைது

உடன்குடி அருகே மோட்டார் சைக்கிள் திருடிய அண்ணன்- தம்பியை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

குலசேகரன்பட்டினம்:

மெஞ்ஞானபுரம் அருகே உள்ள வள்ளியம்மாள்புரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 39). சமையல் தொழிலாளி. இவர் உடன்குடி தங்கநகரத்தில் நடந்த திருமண விழாவுக்கு சமையல் வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். வேலை முடிந்து திரும்பி வந்து பார்க்கும் போது அங்கு நிறுத்தி இருந்த தனது மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து கணேசன் குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ரகுராஜன் விசாரணை நடத்தி குலசேகரன்பட்டினம் தியாகராஜபுரத்தைச் சேர்ந்த கணேசன் மகன் சூரியகுமார், அவரது சகோதரர் பட்டுத்துரை ஆகிய இருவரையும் கைது செய்தார். அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிளை போலீசார் மீட்டனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்