திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கொளத்தூர் கிராமத்தில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் எருதுவிடும் விழா நடத்தப்படுகிறது. அதன்படி இன்று கொளத்தூர் கிராமத்தில் எருது விடும் விழா களைகட்டியது. இதில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
இந்த விழாவின் போது எருதுகள் முட்டியதில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் எருதுவிடும் விழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அனுமதியின்றி எருதுவிடும் விழா நடத்தியதற்காக போலீசார் 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.