தமிழக செய்திகள்

அனுமதியின்றி எருதுவிடும் விழா; 50 பேர் காயம் - 100 பேர் மீது வழக்கு

விழாவின் போது எருதுகள் முட்டியதில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கொளத்தூர் கிராமத்தில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் எருதுவிடும் விழா நடத்தப்படுகிறது. அதன்படி இன்று கொளத்தூர் கிராமத்தில் எருது விடும் விழா களைகட்டியது. இதில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

இந்த விழாவின் போது எருதுகள் முட்டியதில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் எருதுவிடும் விழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அனுமதியின்றி எருதுவிடும் விழா நடத்தியதற்காக போலீசார் 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி