செங்கம்
செங்கம் அருகே புதுப்பாளையம் பகுதியில் உள்ள ஜி.என்.பாளையத்தில் எருது விடும் திருவிழா நடைபெற்றது.
இதில் செங்கம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான காளைகள் கலந்து கொண்டு ஓடியது.
குறிப்பிட்ட எல்லையை குறித்த நேரத்தில் மிக வேகமாக கடந்த மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் புதுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு ரசித்தனர்.