தமிழக செய்திகள்

மதுரை விமான நிலையத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரி பையில் சிக்கிய தோட்டாக்கள்

மதுரை விமான நிலையத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரி பையில் சிக்கிய தோட்டாக்கள்.

தினத்தந்தி

மதுரை,

சென்னை பெரியார் நகரைச் சேர்ந்தவர் சக்தி மணிகண்டன் (வயது 56). சென்னை மாநகராட்சியில் கண்காணிப்பு என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவர் திண்டுக்கல்லில் இருந்த தனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தார். மதுரை விமான நிலையத்தில் சக்தி மணிகண்டனின் பையை அதிகாரிகள் சோதனை செய்தபோது அவரிடம் 4 தோட்டாக்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சக்தி மணிகண்டனை பெருங்குடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சக்தி மணிகண்டன் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருக்கிறார். வீட்டில் பெட்டியில் இருந்த தோட்டாக்களை தவறுதலாக கொண்டு வந்துவிட்டதாக அவர் போலீசில் தெரிவித்தார். ஆனாலும் பெருங்குடி போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு