தமிழக செய்திகள்

வில்லுக்குறி அருகே மோட்டார் சைக்கிள் மோதி பஸ் கண்டக்டர் பலி

மோட்டார் சைக்கிள் மோதி பஸ் கண்டக்டர் பலியானார்

திங்கள்சந்தை:

வில்லுக்குறி அருகே உள்ள காரவிளையை சேர்ந்தவர் நீலகண்ட பிள்ளை (வயது77), ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவர் நேற்று முன்தினம் ஆளூர் பகுதியில் உள்ள தனது மருமகன் வீட்டிற்கு சென்று விட்டு திரும்ப வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். காரவிளை பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியே வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் நீலகண்ட பிள்ளை மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

---

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்