தமிழக செய்திகள்

கடலூரில் மீண்டும் பஸ் சேவை தொடங்கியது..!

கடலூரில் கல்வீச்சு சம்பவத்தால், கிராமப்புறங்களுக்கு இரவுநேர பஸ் சேவை நிறுத்தப்பட்டது.

தினத்தந்தி

கடலூர்,

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் 2-வது சுரங்கம் விரிவாக்கப்பணிக்காக வளையமாதேவி பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணி நேற்று மீண்டும் தொடங்கியது. இதில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்களும் அழித்து, கையகப்படுத்தும் பணி நடந்தது.

இந்த சம்பவத்தை அறிந்ததும் மாவட்டத்தில் ஆங்காங்கே பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. இதில் மாவட்டம் முழுவதும் 13 அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. கல்வீச்சு சம்பவத்தால், கிராமப்புறங்களுக்கு இரவுநேர பஸ் சேவை நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த நிலையில், கடலூரில் கல்வீச்சு சம்பவத்தால் நிறுத்தப்பட்ட பஸ் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. பஸ்கள் அனைத்தும் பணிமனைக்கு திரும்பிய நிலையில், இன்று காலையில் இருந்து பஸ் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் ஏராளமான போலீசார் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு