தமிழக செய்திகள்

பேருந்து கட்டண உயர்வு: மாணவர்கள் போராட்டம்; முதுகுளத்தூர் அரசு கலை கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் முதுகுளத்தூர் அரசு கலை கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. #strike

தினத்தந்தி

ராமநாதபுரம்,

தமிழக அரசு பேருந்து கட்டணத்தினை கடந்த 19ந்தேதி உயர்த்தி அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கல்லூரி மாணவ மாணவிகளும் எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்தி வந்தனர். பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டமும் நடத்தின.

இதனை தொடர்ந்து பேருந்து கட்டணம் அனைத்து நிலைகளிலும் ரூ.1 குறைக்கப்பட்டது. எனினும், கட்டண உயர்வை முழு அளவில் திரும்ப பெற வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக முதுகுளத்தூர் அரசு கலை கல்லூரியின் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனை அடுத்து கல்லூரிக்கு விடுமுறை விடுவது என கல்லூரி நிர்வாகம் முடிவு செய்து அதற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

#strike #college #holiday

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்