தமிழக செய்திகள்

புதர் மண்டி கிடக்கும் ராஜவாய்க்கால்

புதர் மண்டி கிடக்கும் ராஜவாய்க்கால் சுத்தம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

கரூரில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் பஞ்சமாதேவி பிரிவு சாலை அருகே உள்ளது ராஜவாய்க்கால். இந்த ராஜவாய்க்கால் ஆண்டாங்கோவிலில் இருந்து கோயம்பள்ளி, சோமூர் வரை செல்கிறது. இந்த வாய்க்காலில் செல்லும் தண்ணீரால் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் பஞ்சமாதேவி பிரிவு சாலையில் செல்லும் ராஜவாய்க்காலில் செடி, கொடிகள், ஆகாயத்தாமரை உள்ளிட்டவைகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கின்றன. எனவே இந்த செடி, கொடிகளை அகற்றி ராஜவாய்க்காலை சுத்தம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்