தமிழக செய்திகள்

பென்னாகரம் அருகேவிவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்ட முதியவர் கைது

பென்னாகரம் அருகேவிவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்ட முதியவர் கைது செய்யப்பட்டார்

தினத்தந்தி

பென்னாகரம்:

பென்னாகரம் அருகே பூதிப்பட்டி காந்தி நகர் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ளதாக பென்னாகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து சென்றனர். அப்போது பூதிப்பட்டி காந்தி நகரை சேர்ந்த சின்னசாமி (வயது 65), மாதம்மாள் (62) தம்பதியரின் விவசாய நிலத்தில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து 3 அடி உயரமுள்ள 40 கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சின்னசாமியை கைது செய்தனர். தலைமறைவான மாதம்மாளை தேடி வருகின்றனர். 

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை