தமிழக செய்திகள்

மக்கள், தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கும் வரை ஆட்சியை அசைக்க முடியாது: முதல் அமைச்சர் பழனிசாமி பேச்சு

மக்கள், தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கும் வரை ஆட்சியை அசைக்க முடியாது என்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல் அமைச்சர் பழனிசாமி பேசியுள்ளார்.

தினத்தந்தி

கரூரில் நடந்து வரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியுள்ளார். அவர் பேசும்பொழுது, ஆட்சியை கலைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். ஒன்றும் செய்துவிட முடியாது.

செந்தில் பாலாஜி எப்படிப்பட்டவர் என்பதை புரிய வைத்து விட்டார். கரூர் மாவட்டத்திற்கு அவப்பெயரை அவர் ஏற்படுத்தி விட்டார் என கூறுகின்றனர்

அரவக்குறிச்சி தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றி பெற இரவு, பகலாக பாடுபட்டோம். அவர் செய்துள்ள துரோகம் எப்பொழுதும் மறையாது.

எங்கள் அனுபவம்தான் செந்தில் பாலாஜியின் வயது. சலசலப்பு, சூழ்ச்சி, துரோகத்தினால் ஆட்சியை வீழ்த்த முடியாது. மக்கள், தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கும் வரை ஆட்சியை அசைக்க முடியாது என பேசியுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு