தமிழக செய்திகள்

குருபரப்பள்ளி அருகேதடுப்பு சுவரை உடைத்து கார் ஏரியில் பாய்ந்தது

தினத்தந்தி

குருபரப்பள்ளி:

குருபரப்பள்ளி அருகே தடுப்பு சுவரை உடைத்து கொண்டு கார் ஏரியில் பாய்ந்தது.

ஏரியில் கார் பாய்ந்தது

ஓசூரில் பாகலூர் சாலையை சேர்ந்தவர் முகேஷ் முரளி (வயது32). இவர் நேற்று காலை காரில் கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்தார். ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி அருகே சிக்காரிமேடு பக்கமாக வந்த போது, முன்னால் சென்ற கார் மீது முகேஷ்முரளி ஓட்டி சென்ற கார் உரசியது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்து தாறுமாறாக ஓடியது. தொடர்ந்து சாலையின் தடுப்பை உடைத்து அருகில் இருந்த சின்ன ஏரியில் பாய்ந்தது. இதில் முகேஷ் முரளிக்கு காயம் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து கிரேன் வரவழைக்கப்பட்டு, ஏரிக்குள் மூழ்கிய கார் வெளியே எடுக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்