தமிழக செய்திகள்

மழைநீர் கால்வாய் பணியின்போது மரம் சரிந்து விழுந்ததில் கார் சேதம்

மழைநீர் கால்வாய் பணியின்போது மரம் சரிந்து விழுந்ததில் கார் சேதம் அடைந்தது.

தினத்தந்தி

சென்னை கொளத்தூர், குமரன் நகர் 3-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கோகுலகிருஷ்ணன் (வயது 50). வக்கீலான இவர், தனக்கு சொந்தமான காரை வீட்டின் வாசலில் நிறுத்தி இருந்தார்.

அந்த தெருவில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையோரம் இருந்த மரத்தை ஒட்டி பள்ளம் தோண்டி கம்பிகள் கட்டி மழைநீர்கால்வாய் பணி மேற்கொண்டு வருகின்றனர். நேற்று காலை திடீரென அந்த மரம் சரிந்து விழுந்தது. மரத்தின் கிளை அங்கு நிறுத்தி இருந்த கோகுலகிருஷ்ணனின் கார் மீது விழுந்தது. இதில் கார் சேதம் அடைந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீஸ், தீயணைப்பு துறை மற்றும் சென்னை மாநகராட்சி திரு.வி.க. நகர் மண்டல அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். மரத்தை வெட்டி அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். நல்ல வேளையாக மரம் விழுந்தபோது யாரும் அந்த வழியாக செல்லாததால் உயிர் பலி தவிர்க்கப்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து