தமிழக செய்திகள்

விழுப்புரம் அருகேகார் கவிழ்ந்து விபத்து2 பேர் காயம்

விழுப்புரம் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் காயமடைந்தனா.

தினத்தந்தி

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் இருந்து நேற்று மாலை புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார், விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அருகே குடுமியான்குப்பம் அரசு மாதிரி பள்ளி அருகே செல்லும்போது அங்கு சாலையோரம் குவிந்துக்கிடந்த ஜல்லிக்கற்கள் மீது ஏறியபோது எதிர்பாராதவிதமாக தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த புதுச்சேரி மேட்டுத்தெருவை சேர்ந்த வெங்கட் மகன் ரிஷி (வயது 19), புதுச்சேரி சின்னராயபுரத்தைச் சேர்ந்த பார்த்திபன் மகன் சசிதரன் (19) ஆகிய இருவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் வளவனூர் போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்பு வாகனத்தை வரவழைத்து விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தினர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு