தோகைமலை அருகே உள்ள வேலாயுதம்பாளையம் காலனி தெரு பகுதியை சேர்ந்தவர் பரிமளா (வயது 39). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மகளிர் சுய உதவி குழு சம்பந்தமாக கடன் பெற்றதாக தெரிகிறது. இந்தநிலையில் கடந்த 21-ந்தேதி பரிமளா வீட்டிற்கு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் ரவிச்சந்திரன் என்பவர், பரிமளாவிடம் கடனுக்கான தவணை தொகை கேட்டுள்ளார். அப்போது 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன் பரிமளாவை தாக்கினார்.இதில் காயம் அடைந்த அவர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.