தமிழக செய்திகள்

ஓபிஎஸ், ரவீந்திரநாத் மீதான வழக்குகள் ரத்து - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

ஓ.பன்னீர்செல்வம், ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோர் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோர் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.

2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வமும், 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ரவீந்திரநாத்தும் வெற்றி பெற்றிருந்தனர். இந்த நிலையில் வேட்பு மனுவில் அவர்கள் தவறான தகவல்களை தெரிவித்ததாக அதாவது சில தகவல்களை மறைத்ததாக அவர்கள் மீது மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

மிலானி புகார் பற்றி விசாரித்து அறிக்கை தர போலீசுக்கு உத்தரவிட்டதை எதிர்த்து இருவரும் மனுதாக்கல் செய்தனர். இந்த நிலையில் புகார் மனுவுக்கு ஆதரவாக எந்த பிரமாண மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறி வழக்கை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை