தமிழக செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு சாதி சான்றிதழ்

மாணவ-மாணவிகளுக்கு சாதி சான்றிதழை பரமக்குடி சப்-கலெக்டர் வழங்கினார்.

தினத்தந்தி

பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா நாராயணபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் சாதி சான்றிதழ் கேட்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களில் மாணவ-மாணவிகள் உள்பட 61 பேருக்கு முதல் கட்டமாக சாதி சான்றிதழ்களை பரமக்குடி சப்-கலெக்டர் அப்தாப் ரசூல் வழங்கினார். அதைத் தொடர்ந்து அவர்கள் சப்-கலெக்டருக்கு நன்றி தெரிவித்தனர். பின்பு அவர்களுக்கு இலவசமாக உணவுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கமுதி தாசில்தார் சேதுராமன், சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் வரதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்