தமிழக செய்திகள்

தபால்காரர் உள்பட 2 பேரிடம் செல்போன் பறிப்பு

தபால்காரர் உள்பட 2 பேரிடம் செல்போன் பறித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ்நகர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார்(வயது 48). இவர், ஆவடியில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் தபால்காரராக வேலை செய்து வருகிறார். இவர், வீட்டில் இருந்து சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் செல்லும்போது மோட்டார் சைக்கிளில் அவரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர், திடீரென சிவகுமாரின் சட்டைபையில் இருந்த செல்போனை பறித்து சென்றுவிட்டார்.

இதேபோல் வியாசர்பாடி பள்ளத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(52). தனியார் நிறுவன ஊழியரான இவர், கொடுங்கையூர் போலீஸ் நிலையம் அருகே சிட்கோ மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் சுரேஷிடம் இருந்த செல்போனை பறித்து சென்றுவிட்டார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து