தமிழக செய்திகள்

செல்போன்கள், மடிக்கணினிகள் திருட்டு

தஞ்சையில் மாணவர்கள் விடுதியில் செல்போன்கள், மடிக்கணினிகள் திருட்டு போனது.

தினத்தந்தி

வல்லம்;

தஞ்சை அருகே உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் ஆந்திர மாநிலம் ஐதராபாத் நகரை சேர்ந்த சாய்கிருஷ்ணா(வயது20), சாய்வர்தன்(20) மற்றும் கணேஷ் (20) ஆகியோர் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் பல்கலைக்கழகத்திற்கு எதிர்புறம் அமைந்துள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். இந்தநிலையில், சம்பவத்தன்று இரவு போதுமான காற்று இல்லாததால் தங்களது அறை கதவை பூட்டாமல் மாணவர்கள் படுத்து தூங்கினர்.மறு நாள் காலை மாணவர்கள் கண் விழித்து பார்த்த போது அறையில் இருந்த விலை உயர்ந்த 2 செல்போன்கள், 3 மடிக்கணினிகள் மற்றும் ரூ.5000 இருந்த பணப்பை திருட்டு போயிருந்தது. இதைக்கண்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன் மதிப்பு ரூ.3.80 லட்சம் என கூறப்படுகிறது. இது குறித்து வல்லம் போலீஸ் நிலையத்தில் மாணவர் சாய்கிருஷ்ணா புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன், மடிக்கணினியை திருடி சன்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். 

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை