தமிழக செய்திகள்

ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறிக்க முயற்சி

ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறிக்க முயற்சி நடந்தது.

தினத்தந்தி

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள கண்டிரமாணிக்கம் தெற்கு அக்ரஹார தெருவை சேர்ந்தவர் கிஷோர். இவருடைய மனைவி வள்ளி (வயது38). இவர் நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். நேற்று பள்ளியில் இருந்து தனது குழந்தைகள் 2 பேருடன் மொபட்டில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.குடவாசல் அருகே மணவெளி பகுதியில் வந்தபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், வள்ளியின் மொபட்டை வழிமறித்தார்.பின்னர் அந்த நபர், வள்ளி அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். அப்போது வள்ளி, தனது தங்க சங்கிலியை காப்பாற்ற கடுமையாக போராடி உள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் அவரையும், குழந்தைகளையும் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து வள்ளி கொடுத்த புகாரின் பேரில் குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்