சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பராமரிப்பு பணி காரணமாக 10, 12, 13-ந்தேதிகளில் கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செயப்பட்டுள்ளது.
* சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 9.32, 10.08, 10.56 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் சிங்கப்பெருமாள் கோவில்-செங்கல்பட்டு இடையிலும், செங்கல்பட்டு-கடற்கரை இடையே காலை 11.30, 12.20, 1 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் செங்கல்பட்டு-சிங்கப்பெருமாள் கோவில் இடையிலும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* திருமால்பூர்-கடற்கரை இடையே காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.