தமிழக செய்திகள்

வெங்கடாஜலபதி கோவிலில் தேர் திருவிழா

திருவிழந்தூர், பல்லவராயன் பேட்டை வெங்கடாஜலபதி கோவிலில் தேர் திருவிழா நடந்தது.

மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் பல்லவராயன் பேட்டையில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி மாத பிரமோற்சவ விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 15- ந் தேதி இரவு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகளுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்று கடந்த 24-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அலமேலுமங்கைக்கும், சீனிவாசபெருமாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் காலை வெண்ணெய்த்தாழியும், இரவு குதிரை வாகனத்தில் சாமி புறப்பாடும் நடந்தது. இதனை தொடர்ந்து நேற்று தேர் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு 'கோவிந்தா, கோவிந்தா' என்று கோஷமிட்டப்படி தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். நான்கு வீதிகளையும் சுற்றி வந்த தேர் மீண்டும் நிலையை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு