தமிழக செய்திகள்

கோவையில் நடந்த சோதனை: முக்கிய நபரை கைது செய்து கொச்சி அழைத்துச் சென்றனர் - தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடவடிக்கை

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் நேற்று 7 இடங்களில் சோதனை நடத்திய தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் 6 பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கோவை,

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணைக்கு பின்னர் அவர்களில் முக்கிய நபரான முகமது அசாருதீன் என்பவரை இரவில் கைது செய்து கேரள மாநிலம் கொச்சிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இன்று (வியாழக்கிழமை) அவரை தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள்.

அவர் மீது சட்டவிரோத தடுப்பு சட்டத்தின் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், மற்ற 5 பேருக்கும் கொச்சியில் உள்ள தனிக்கோர்ட்டில் இன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருப்பதாகவும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி