தமிழக செய்திகள்

பேரறிவாளனின் தாயாரிடம் தொலைபேசியில் உரையாடிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளிடம் தொலைபேசியில் உரையாடினார்.

தினத்தந்தி

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை சுப்ரீம்கோர்ட் நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி விடுதலை செய்து இன்று உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளிடம் தொலைபேயில் உரையாடினார். இந்த உரையாடலின் போது, பேரறிவாளன் விடுதலை குறித்து அற்புதம்மாளிடம் தனது மகிழ்ச்சியினை அவர் வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பேரறிவாளன், அவரது தாயார் அற்புதம்மாள் இன்று மாலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்