தமிழக செய்திகள்

சென்னை: சிறார் ஆபாச படங்களை இணையத்தில் விற்பனை செய்த வாலிபர் கைது

டெலிகிராம் செயலி மூலம் சிறார் ஆபாச படங்களை விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் டெலிகிராம் செயலி மூலம் சிறார் ஆபாச படங்கள் விற்பனை செய்யப்படுவதாக, ஆவடி காவல் ஆணையரகத்தின் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் குவிந்தன. இதன் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சென்னை மணலி சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்ற வாலிபர், சிறார் ஆபாச படங்களை டெலிகிராம் செயலில், 100 சிறார் ஆபாச படங்கள் 100 ரூபாய் எனவும், 250 வீடியோக்களை 150 ரூபாய்க்கும் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார், சிறார் ஆபாச படங்களை விற்பனை செய்ய பயன்படுத்திய இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்