தமிழக செய்திகள்

சென்னை: மொபட்டில் இருந்து கீழே விழுந்த இளம்பெண்.. உள்ளங்கையை துளைத்த கம்பி

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா (வயது 19). இவர், சென்டிரல் அருகே உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலை முடிந்து மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி மொபட்டில் இருந்து தவறி விழுந்தார். இதில், சாலையோர இரும்பு கம்பி அவரது உள்ளங்கையை குத்தி கிழித்தது. இதனால் அவர் வேதனையில் அலறி துடித்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு இரும்பு கம்பியை அறுத்து எடுத்து அவரை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்