தமிழக செய்திகள்

சித்த மருத்துவம் : மத்திய அரசு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

சித்த மருத்துவத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சென்னை,

சித்த மருத்துவத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக மத்திய அரசு மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

பிற மருத்துவத்துறைகளை விட சித்த மருத்துவத்துக்கு குறைந்த நிதி ஒதுக்கியது துரதிர்ஷ்டவசமானது. ஆயுஷ் என்ற பெயரில் இருந்து சித்தாவை குறிப்பிடும் 'எஸ்' ஐ நீக்கி விடலாமே எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்றம், குறைந்த நிதி ஒதுக்கீடு செய்தது குறித்து விளக்கமளிக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.