கோப்பு படம் 
தமிழக செய்திகள்

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் ஆந்த்ராக்ஸ் பாதித்த மான் உயிரிழப்பு

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மான் ஒன்று ஆந்த்ராக்ஸ் பாதித்து உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மான் ஒன்று உயிரிழந்து கிடந்தது. அதனை ஆய்வு செய்ததில் ஆந்த்ராக்ஸ் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இதனால், வேறு 3 மான்களிடம் பரிசோதனை நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியாவதற்காக வன துறை காத்திருக்கிறது.

அந்த மான்களுக்கும் ஆந்த்ராக்ஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. சென்னை ஐ.ஐ.டி. பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் யாரும் மானுடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்ள வேண்டாம் என்று வன துறை அறிவுறுத்தி உள்ளது.

கோவை வன பகுதியில் ஆந்த்ராக்ஸ் பாதிப்புக்கு 35 வயதுடைய ஆண் யானை ஒன்று நேற்று உயிரிழந்து இருந்தது. இந்த நிலையில், சென்னையில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு