தமிழக செய்திகள்

சென்னை: ஆட்டோ மீது பனைமரம் விழுந்து ஓட்டுநர் உயிரிழப்பு

ஆட்டோவில் பயணம் செய்த பயணி காயமின்றி உயிர்தப்பினார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆட்டோ ஒன்று பயணியை ஏற்றிக்கொண்டு அயனாவரம் சென்றுகொண்டிருந்தது. ஆட்டோவை அப்துல் வாஹித்(38) என்பவர் ஓட்டினார். கீழ்ப்பாக்கம் அருகே சென்றுகொணிருந்தபோது, அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த பனைமரம் ஒன்று எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது விழுந்தது.

இதில், ஆட்டோவின் முன் பகுதி கடுமையாக சேதமடைந்தது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் அப்துல் வாஹித் பரிதாபமாக உயிரிழந்தார். ஆட்டோவில் பயணம் செய்த பயணி காயமின்றி உயிர்தப்பினார். கரையான் அரித்ததால் பனைமரம் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து